Sunday, March 26, 2006

பெண்கள்

கோ.கணேஷ் @ Tuesday, March 08, 2005
http://gganesh.blogspot.com/2005/03/blog-post_08.html

At 2:50 PM, Chandravathanaa said...
யாருக்கு முதலிடம்...?
தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை.
தாய்க்கு இணையாக யாருமில்லை.
தாயின் அன்பை யாராலும் தர முடியாது.
கருவில் சுமந்த தாயின் ஸ்தானம் எவருக்கும் கிடைக்காது.
தாயின் அன்பில் துளியும் சுயநலம் இல்லை.
ஆனாலும் ஒரு மனிதன் கூடுதலாகக் கடமைப் படுவது மனைவியிடம்தான்.
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்தவள், மனைவி என்ற ஸ்தானத்துக்கு வந்ததும் கணவனுக்குச் செய்யும் பணிவிடைகள், காட்டும் அன்பு.... தேற்றும் பரிவு.. இத்தனைக்கும் மேலால் கணவனின் சினப்பு.. கோபம்.. தகிப்பு.. எல்லாவற்றையும் தாங்கி அவனையும் தாங்கி(கணவன் மனைவியைத் தாங்கவில்லையா என்று கேட்காதீர்கள. ஒரு மனைவி போல தாங்குமளவுக்கு இன்னும் கணவன்கள் இல்லை)அவனது குழந்தைகளுக்கும் தாயாக....... இந்தக் கடன்களை தீர்ப்பது என்பது ஆண்களால் முடியாதது.

No comments: