Tuesday, July 25, 2006

வாளின் நுனியில் சிதறும் வாழ்வு

By டிசே தமிழன்
Tuesday, July 25th, 2006 at 12:21 am

வாளின் நுனியில் சிதறும் வாழ்வு

4Chandravathanaa says:
July 25th, 2006 at 1:25 am


இளங்கோ,

வாளின் நுனியில் சிதறும் வாழ்வு
வாசித்தேன்.

அங்கு பின்னூட்டத்திற்கு இடமில்லாததால் இங்கு எழுதுகிறேன்.
நல்ல பதிவு. வாழ்வு சிதறப்பட்ட எம்மவரின் வாழ்க்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

உங்கள் எழுத்துக்களில் கூடுதலான சமயங்களில் மரணம் என்ற சொல்லும் அது மலிந்து கிடக்கும் விதமும் கூடவே அதன் வலியும் உணர்த்தப் படுவதைப் பார்த்திருக்கிறேன். அந்தப் பாதிப்பின் காரணத்தை உங்களது இந்தப் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்.

படத்திலே வருகின்ற இரத்தம் உங்களை எப்படிப் பாதிக்கிறதோ அதே போல குண்டு வெடிப்புக்கள் என்னைப் பாதிக்கின்றன. ஏதோ ஒரு படத்தில் அர்ச்சுனும் கமலும் நடிக்கிறார்கள் என நினைக்கிறேன். படம் தொடங்கும் போதே பஸ் குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டோ அல்லது பாலம் உடைந்தோ எரிந்து குழந்தைகள் இறக்கிறார்கள். அந்தக் காட்சி என்னைக் குழறி அழ வைத்து விட்டது. அன்று முழுவதுமே நான் மனமுடைந்து அழுது கொண்டே இருந்தேன். எந்தச் சோகமான படத்தையும் அழாமல் இருந்து பார்ப்பேன். ஆனால் இப்படியான காட்சிகளில் கலங்கி விடுவேன்.

No comments: