Thursday, July 20, 2006

கதைசொல்லியும் Gang fightsம்

By டிசே தமிழன்
Tuesday, June 13th, 2006 at 8:14 am

கதைசொல்லியும் Gang fightsம்


Chandravathanaa says:
July 20th, 2006 at 1:10 am


இதை மீண்டும் ஒரு முறையாய் இன்று வாசித்து முடித்தேன்.

இதை முதன்முதலில் கனடாவுக்கு வந்து 6கிழமைகள் நின்று திரும்பிய சில வருடங்களில் வாசித்த போது ஒவ்வொரு சம்பவத்தையும் மனக்கண்ணில் கொண்டு வந்து பார்க்க முடிந்தது. கனடாவில் எமது இளைய சமுதாயத்தின் நடைமுறைகளை நேரிலே கண்ட போது எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. திடீரெனக் கிடைத்த சுதந்திரத்தை அவர்கள் பயன் படுத்திய விதமும், திடீரென ஆக்கிரமித்த குடும்ப உறவுகள் இல்லாத தனிமையின் வெறுமையைப் போக்க அவர்கள் கூடிய விதங்களும் மிகவும் வருத்தத்துக்கு உரியவை.

இதை எழுதிய நீங்கள்தான் கதையின் கதாநாயகனாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சி. இதை எழுதும் போது உங்கள் எழுத்தில் உங்களைப் புரிந்து கொண்ட தன்மை இருக்கிறது. இயலாமை உங்களை அறியாமலே உங்களை அழுத்தினாலும் அதனால் சில பல ஒவ்வாத செயற்பாடுகள் நடந்தாலும் உங்களிடம் மனிதம் இருந்திருக்கிறது.

அங்கு சுட்டவர்களும் வெட்டியவர்களும் மனிதமற்றவர்கள் என்றில்லை. ஏதோ ஓருவித விரக்தியும் தனிமையும் சேர்ந்து மனநிலை குழம்பியவர்கள் என்றே அவர்களைக் கொள்ள வேண்டும். அவர்கள் மீண்டும் ஒரு அன்பான உறவைச் சந்தித்து அன்பின் அணைப்பைப் பெறும் போது மாறியிருப்பார்கள். சாதாரண மனிதர்களாகியிருப்பார்கள். தமது தவறுக்கு நியாயம் தேடுபவர்களாய் இருந்தாலும் கூட உள்ளுக்குள்ளே கண்டிப்பாக வருந்தியிருப்பார்கள்.

இன்றைய நீங்கள் கூட அந்த வடுக்களுக்குள் அகப்பட்ட ஒருவனின் சாயலே தெரியாமலே இதுவரை எழுத்தால் எனக்கு அறிமுகமாகி இருந்தீர்கள். இத்தனை எழுத்து வன்மை உள்ள எத்தனை இளைஞர்களை புலம் பெயர்தல் புரட்டிப் போட்டிருக்கிறது என்ற உண்மையை உணர முடியும் போது வருந்தாமல் இருக்க முடியவில்லை.

Chandravathanaa says: July 20th, 2006 at 1:10 am