Saturday, August 26, 2006

மதுரா

Friday, August 25, 2006
மதுரா

கலாச்சாரத்தின் கனம்

மதுரா
நகைச்சுவை இழையோட கனமான கருத்துக்களை நீங்கள் எழுதும் விதம் அழகாய் உள்ளது. உங்களது சில பதிவுகளை இன்றுதான் படித்தேன். ரசிக்கக் கூடிய விதமாகப் பலதை எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

உங்களது இந்தப் பதிவுக்குப் பதில் சொல்வதானால்
இதுதான் சரி, அதுதான் சரி என்ற வலியுறுத்தல்கள் கலாச்சார வடிவில் தேவையில்லை என்றே நான் கருதுகிறேன். எது பொருந்துகிறதோ, எது சரியெனப் படுகிறதோ அதை ஒவ்வொன்றிலும் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பொருந்தவில்லை என்று படுவதை விட்டு விட வேண்டும்.

கலாச்சாரம் என்ற பெயரில் திணிக்கப் படுபவைகளையும்,
அது எதற்காக அந்தக் காலத்தில் வலியுறுத்தப் பட்டது என்பதை முடிந்தளவு யோசிக்க வேண்டும். அது இந்தக் காலத்தில் தேவையில்லை என்று பட்டால் விட்டு விட வேண்டும். தேவை என்று படுபவையைத் தொடர வேண்டும்.



அவள் ஒரு தொடர் கதை
மதுரா
Wednesday, June 21, 2006

Chandravathanaa சொல்வது...
பின்னூட்டத்திற்கான பதில் அருமை.
Fri Aug 25, 02:49:47 PM PDT


Madura சொல்வது...
சந்திரவதனா, ரொம்ப நன்றி, வருகைக்கும் வாழ்த்துக்கும்! உங்க பதிவு வந்து நிறைய படிச்சிருக்கேன். எல்லா ஃபோட்டோவும் பாத்திருக்கேன். உங்க வாழ்கையை ரசிச்சு யோசிச்சிருக்கேன்! நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்!
Fri Aug 25, 03:17:16 PM PDT

Sunday, August 20, 2006

கனடீய தமிழ் இளைஞர் யுவதிகளின் இருத்தல்கள்

By டிசே தமிழன்

Wednesday, August 16th, 2006 at 9:35 am
http://elanko.net/pathivu/?p=210

10Chandravathanaa says: Your comment is awaiting moderation.

August 20th, 2006 at 5:25 am
எமது இளைய சமூகத்தில் வேர் கொண்டிருக்கும் பாரிய பிரச்சனைகளில் இதுவும் ஒன்று.
இப்பிரச்சனைக்கு முற்று முழுதாகப் பெற்றோரையும் குற்றம் கூறி விட முடியாது. சில சமயங்களில் பெற்றோரின் பிள்ளைகளிடமிருந்தான அதீதமான எதிர்பார்ப்பும் ஒரு காரணமாயிருந்தாலும் வேறும் பல காரணங்கள் இருக்கின்றன. டிசே குறிப்பிட்டது போல ஒரு பெண்ணுக்காக தமக்குள் ஆளாளுக்கு வெட்டிக் கொத்துப் பட்ட கதைகள் ஜேர்மனியிலும் உண்டு.

போரின் பாதிப்பும், புலம் பெயர்வு அவர்களை அறியாமலே அவர்களுள் ஏற்படுத்திய தாக்கமும், இரு கலாச்சாரங்களுக்குள்ளான முரண்பாடுகளில் வளர வேண்டிய சூழ்நிலையும், தாழ்வுமனப்பான்மையில் நான்தான் பெரியவன், வலியவன் என்று காட்டிக் கொள்ள வேண்டிய நிலைப்பாடும்…. என்று பல காரணிகள் இந்த புலம் பெயர் இளைஞர்கள் யுவதிகளின் இருத்தல்களை நிர்ணயிக்கின்றன.

இங்கு பெற்றோரின் பங்கு இத்தனை சிக்கல்கள் தமது பிள்ளைகளுக்கு இருக்கிறதென்று என்பதை உணர்ந்து அவர்களை அணுக வேண்டிய பொறுப்பான செயற்பாடே. நாங்கள் பெரியவர்கள். உன்னைப் பெற்றவர்கள். நாம் சொல்வதுதான் சரி… என்ற பாணியில் அவர்களை அணுகாமல் அவர்கள் மனதின் உளைச்சல்களையும் இயலாமைகளையும் கருத்தில் கொண்டு தோழமையோடு அணுகி.. நட்போடு கதைக்கும் போது பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். உடனே இல்லாவிட்டாலும் அந்த இளைஞர்கள் பின்னராவது சிந்தித்து செயற்பட பெற்றோரின் இத்தகைய அணுகல் உதவும்.

இத்தனை கவனமும் ஒரு குறிப்பிட்ட வயது வரையே. அது தாண்டியதும் அந்தப் பிள்ளைகள் தாமாக மாறுவார்கள். அந்தக் குறிப்பிட்ட வயதுக்குள் பாரதூரமாக எதுவும் நடந்து விடாது… அவர்கள் பாதைகளும் மாறி விடாது இருக்க பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடனும் நட்புடனும் பிள்ளைகளுடன் பழக வேண்டும்.

Tuesday, July 25, 2006

வாளின் நுனியில் சிதறும் வாழ்வு

By டிசே தமிழன்
Tuesday, July 25th, 2006 at 12:21 am

வாளின் நுனியில் சிதறும் வாழ்வு

4Chandravathanaa says:
July 25th, 2006 at 1:25 am


இளங்கோ,

வாளின் நுனியில் சிதறும் வாழ்வு
வாசித்தேன்.

அங்கு பின்னூட்டத்திற்கு இடமில்லாததால் இங்கு எழுதுகிறேன்.
நல்ல பதிவு. வாழ்வு சிதறப்பட்ட எம்மவரின் வாழ்க்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

உங்கள் எழுத்துக்களில் கூடுதலான சமயங்களில் மரணம் என்ற சொல்லும் அது மலிந்து கிடக்கும் விதமும் கூடவே அதன் வலியும் உணர்த்தப் படுவதைப் பார்த்திருக்கிறேன். அந்தப் பாதிப்பின் காரணத்தை உங்களது இந்தப் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்.

படத்திலே வருகின்ற இரத்தம் உங்களை எப்படிப் பாதிக்கிறதோ அதே போல குண்டு வெடிப்புக்கள் என்னைப் பாதிக்கின்றன. ஏதோ ஒரு படத்தில் அர்ச்சுனும் கமலும் நடிக்கிறார்கள் என நினைக்கிறேன். படம் தொடங்கும் போதே பஸ் குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டோ அல்லது பாலம் உடைந்தோ எரிந்து குழந்தைகள் இறக்கிறார்கள். அந்தக் காட்சி என்னைக் குழறி அழ வைத்து விட்டது. அன்று முழுவதுமே நான் மனமுடைந்து அழுது கொண்டே இருந்தேன். எந்தச் சோகமான படத்தையும் அழாமல் இருந்து பார்ப்பேன். ஆனால் இப்படியான காட்சிகளில் கலங்கி விடுவேன்.

கதைசொல்லியும் Gang fightsம்

By டிசே தமிழன்
Tuesday, June 13th, 2006 at 8:14 am

கதைசொல்லியும் Gang fightsம்


1
Chandravathanaa says:
July 20th, 2006 at 1:10 am


இதை மீண்டும் ஒரு முறையாய் இன்று வாசித்து முடித்தேன்.

இதை முதன்முதலில் கனடாவுக்கு வந்து 6கிழமைகள் நின்று திரும்பிய சில வருடங்களில் வாசித்த போது ஒவ்வொரு சம்பவத்தையும் மனக்கண்ணில் கொண்டு வந்து பார்க்க முடிந்தது. கனடாவில் எமது இளைய சமுதாயத்தின் நடைமுறைகளை நேரிலே கண்ட போது எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. திடீரெனக் கிடைத்த சுதந்திரத்தை அவர்கள் பயன் படுத்திய விதமும், திடீரென ஆக்கிரமித்த குடும்ப உறவுகள் இல்லாத தனிமையின் வெறுமையைப் போக்க அவர்கள் கூடிய விதங்களும் மிகவும் வருத்தத்துக்கு உரியவை.

இதை எழுதிய நீங்கள்தான் கதையின் கதாநாயகனாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சி. இதை எழுதும் போது உங்கள் எழுத்தில் உங்களைப் புரிந்து கொண்ட தன்மை இருக்கிறது. இயலாமை உங்களை அறியாமலே உங்களை அழுத்தினாலும் அதனால் சில பல ஒவ்வாத செயற்பாடுகள் நடந்தாலும் உங்களிடம் மனிதம் இருந்திருக்கிறது.

அங்கு சுட்டவர்களும் வெட்டியவர்களும் மனிதமற்றவர்கள் என்றில்லை. ஏதோ ஓருவித விரக்தியும் தனிமையும் சேர்ந்து மனநிலை குழம்பியவர்கள் என்றே அவர்களைக் கொள்ள வேண்டும். அவர்கள் மீண்டும் ஒரு அன்பான உறவைச் சந்தித்து அன்பின் அணைப்பைப் பெறும் போது மாறியிருப்பார்கள். சாதாரண மனிதர்களாகியிருப்பார்கள். தமது தவறுக்கு நியாயம் தேடுபவர்களாய் இருந்தாலும் கூட உள்ளுக்குள்ளே கண்டிப்பாக வருந்தியிருப்பார்கள்.

இன்றைய நீங்கள் கூட அந்த வடுக்களுக்குள் அகப்பட்ட ஒருவனின் சாயலே தெரியாமலே இதுவரை எழுத்தால் எனக்கு அறிமுகமாகி இருந்தீர்கள். இத்தனை எழுத்து வன்மை உள்ள எத்தனை இளைஞர்களை புலம் பெயர்தல் புரட்டிப் போட்டிருக்கிறது என்ற உண்மையை உணர முடியும் போது வருந்தாமல் இருக்க முடியவில்லை.

Chandravathanaa says:
July 20th, 2006 at 1:10 am


2
Chandravathanaa says:
July 20th, 2006 at 1:36 am

இளங்கோஎனது கருத்து உங்களுக்குப் பொருந்தவில்லை என்று பட்டால் தயங்காமல் அழித்து விடுங்கள்.நான் சொல்ல வந்ததைச் சரியாகச் சொல்லவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

இதை முதன்முதலாக வாசித்த போது இது என்னை மிகமிகப் பாதித்தது. எனது கணவரோடு இதைப் பற்றி நீண்ட நேரம் கதைத்தேன். புலம்பெயர் இளைஞர்களுக்காக மிகவும் வருந்தினேன். புலம்பெயர் இளைஞர்கள் மீது யாராவது குற்றம் கூறினால் எனக்கு அவர்கள் மேல் கோபம் வருவதற்கு இக்கதையும் ஒரு காரணம்.

தவறுகளை மட்டுமே பார்க்கும் எமது சமூகம் தவறுக்கான காரணங்களைப் பார்ப்பதில்லை. நீங்கள் குறிப்பிட்ட ஒருபக்கம் இறுகிப்போய், விகாரித்த நண்பர்களின் இன்னொருபக்கத்தில் மிகமென்மையான நெஞ்சிருப்பது யான் அறிவேன். காலத்தை வெறுத்து கையாலாகதவர்களாகிய அவர்களுக்குள் உள்ளூறும் மனிதம்பற்றி, நல்ல நட்பிற்காய் பின்விளைவுகள் எதையும் யோசிக்காது, கைகொடுக்கும் உண்மையான தருணங்கள் குறித்து….
இந்த வரிகளின் உண்மையைப் பலர் உணர்வதில்லை
.


3
டிசே தமிழன் says:
July 20th, 2006 at 8:44 am

சந்திரவதனா, முதலாவது பின்னூட்டத்தை ஏற்கனவே அனுமதித்து விட்டதனால் எந்தப் பின்னூட்டத்தை அனுமதிப்பது/விலத்துவது என்று சற்றுக்குழப்பமாய் இருப்பதால் (இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதால்) இரண்டையும் அனுமதித்திருக்கின்றேன். தவறாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

---

டிசே தமிழன் says:
July 20th, 2006 at 10:35 am


சந்திரவதனா,பிரதியொன்று எழுதப்பட்டு பொதுவில் வைக்கப்பட்டுவிட்டால், வாசகர் தனக்குரிய பிரதியாய் வாசிக்கவும் விமர்சிக்கவும் உரிமையிருக்கிறது என்று நம்புவதால் நீங்கள் வைக்கும் கருத்துக்கள் எதையும் அகற்றவேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

நிற்க.முதலாவது பின்னூட்டத்தையும் எனக்குத் தனிப்பட்டதாய் சொல்லப்பட்டதாய் நினைக்காது, பிரதியிலுள்ள கதைசொல்லிக்கு கூறப்பட்டதாகவே எடுத்துக்கொள்கின்றேன். எனவே நீங்கள் எழுதியதில் தவறேதும் இருப்பதாய் நினைக்கவில்லை. எழுதப்படும் ஆக்கங்களிலுள்ள விடயங்களில் உண்மையாய் நடந்தது / நடக்கவில்லை என்று அடிக்குறிப்பிடுவது கூட வாசிப்பவரின் வெளிக்குள் அத்துமீறுவதாய் இருக்கும் என்று நினைப்பதால் பல சமயங்களில் இவ்வாறான கேள்விகளைக் கடந்தே போயிருக்கின்றேன். இப்போது கூட அப்படிக் கடந்துபோகலாம் என்றாலும் -மெளனம் சம்மதமாய் போய்விடக்கூடும் என்பதால்- ஒரு சிறு குறிப்பாய் இந்தக்கதையில் எந்த இடத்திலும் நான் இல்லை என்பதைக் கூறிக்கொள்கின்றேன். இந்தக்கதைசொல்லியைப் போல இருந்திருந்தால் கூட அதற்காய் இன்றையபொழுதில் வருந்தியிருப்பேனே தவிர, இதை வெளிப்படையாகச் சொல்ல அவமானப்படவோ வெட்கப்படவோ செய்திருக்கமாட்டேன் என்பது மட்டும் உறுதியாய்த் தெரியும்.

இந்தக்கதையை எழுத ஆரம்பித்தபோது சரி/பிழை, நியாயம்/அநியாயம் என்று எந்த ஒருபக்கமும் சாய்ந்துவிடக்கூடாது என்பதில் மட்டுமே கவனமாயிருந்தேன். அப்படியிருந்தும் வளாக சஞ்சிகையில் இந்தக்கதை வெளிவந்தபோது, குழுக்களின் வன்முறைக்கு ஆதரவான கதை என்றுதான் விமர்சிக்கப்பட்டது (பதிவுகள் இணையத்தளத்திலும் சில நண்பர்கள் ஒரு சார்பாய் இருக்கின்றது என்று விவாதித்ததாய் நினைவுண்டு)

.…..

மற்றும்படி, இத்தகைய விமர்சனங்களையும் விட, விளிம்புநிலை மனிதர்களாய் ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும் இந்த இளைஞர்கள் குறித்து அக்கறைப்பட உங்களைப் போன்ற பலர் சமூகத்தில் இருக்கின்றார்கள் என்பதுதான் எனக்கு முக்கியமாய்ப்படுகிறது. இதை முன்பு வாசித்து, முகங்கள் தெரியாமல் மின்னஞ்சல்களில் தொடர்புகொண்ட சிலரது உணர்வுகளும் உங்களைப் போன்றே இருந்திருக்கின்றன என்பதுவும் இதத்தைத் தந்திருந்தது.


5
Chandravathanaa says:
July 21st, 2006 at 5:07 am

முதலாவது பின்னூட்டத்தை ஏற்கனவே அனுமதித்துவிட்டதனால் எந்தப் பின்னூட்டத்தை அனுமதிப்பது/விலத்துவது என்று சற்றுக்குழப்பமாய் இருப்பதால் (இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதால்) இரண்டையும் அனுமதித்திருக்கின்றேன். தவறாக நினைக்கமாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

எனது கருத்துக்களை நீங்கள் கருத்துக்களாகவே ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.அழிக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. உங்களுக்கு அது பிடிக்கவில்லையானால் மட்டுமே அழிக்கச் சொன்னேன். ஒன்றை அழித்திருந்தால் மற்றையது பொருந்தாமல் போயிருக்கும். இருப்பதில் உங்களுக்கு ஆட்சேபனை இல்லாதவரை இரண்டுமே இருப்பது நல்லது.

கதைபற்றிய, உங்கள் கருத்துக்கள் பற்றிய… எனது மேலதிக எண்ணங்களைப் பின்னர் தருகிறேன்.

6
யாத்திரீகன் says:
July 21st, 2006 at 8:15 am


>>>> ஒருபக்கம் இறுகிப்போய், விகாரித்த நண்பர்களின் இன்னொருபக்கத்தில் மிகமென்மையான நெஞ்சிருப்பது யான் அறிவேன். காலத்தை வெறுத்து கையாலாகதவர்களாகிய அவர்களுக்குள் உள்ளூறும் மனிதம்பற்றி, நல்ல நட்பிற்காய் பின்விளைவுகள் எதையும் யோசிக்காது, கைகொடுக்கும் உண்மையான தருணங்கள் குறித்து….


7
டிசே தமிழன் says:
July 21st, 2006 at 2:26 pm

சந்திரவதனா: கதை பற்றிய உஙகள் கருத்து அறிய ஆவல்; எழுதுங்கள்.

யாத்ரீகன்: நீங்கள் கூறவந்தது எதுவோ இடைநடுவில் நின்றுவிட்டது போல :-).

8
மலைநாடான் says:
July 23rd, 2006 at 1:41 pm

புலத்தில் எங்கள் இளைய தலைமுறை குறித்த மிகச் சரியான நோக்குடன் வந்த சொற்பமான பதிவுகளில் இதுவும் அடங்கும் எனக் கருதுகின்றேன்.

//நாங்கள் எதையும் அளவோடு அனுபவிக்கத்தெரியாதவர்களெண்டும், பல்வேறுபட்ட மரபின் இழைகள் எம்மை இறுக்க பாலியல் சுதந்திரம் மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள்//
இது எங்கள் சமுகம் குறித்ததுப் பார்க்கபட்ட ஒரு நுட்பமான பார்வை எனக்கருதுகின்றேன்.

//ஒருபக்கம் இறுகிப்போய், விகாரித்த நண்பர்களின் இன்னொருபக்கத்தில் மிகமென்மையான நெஞ்சிருப்பது யான் அறிவேன். காலத்தை வெறுத்து கையாலாகதவர்களாகிய அவர்களுக்குள் உள்ளூறும் மனிதம்பற்றி, நல்ல நட்பிற்காய் பின்விளைவுகள் எதையும் யோசிக்காது, கைகொடுக்கும் உண்மையான தருணங்கள் குறித்து என்னைப்போன்ற ஒரு சிலரே அறிவர்//
இதன் பொருட்டே இளைஞர்கள் மீது எனக்கு மிகுந்த பற்றுதல் உண்டு. இவர்களை அன்பு செய்தால், அவர்களிடமிருந்து ஆக்க பூர்வமான பல விடயங்களை எங்கள் சமுகம் பெற்றுக் கொள்ளலாம் என்பது எனது எண்ணம்.

டி.சே!அருமையான ஒரு பதிவினைத் தந்தமைக்காகஉங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


10
Chandravathanaa says:
July 25th, 2006 at 2:03 am

இளங்கோ,

எப்போதுமே ஒரு கதை தன்னிலையில் இருந்து எழுதப் படும் போது கதைசொல்லியும் கதாசிரியரும் ஒருவரே என்ற பிரமை வாசகர்கள் மனதில் ஏற்பட்டு விடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

நானே, சில சமூகப் பிரச்சனைகளை தன்னிலையில் நின்று எழுதியதால் அது என் வீட்டுப் பிரச்சனையோ என்ற கேள்விக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறேன். “இவ வீட்டில் இப்படித்தான்..” என்ற கேலிக்கும் ஆளாகியிருக்கிறேன். அப்போதெல்லாம் “இவர்கள் ஏன் இப்படிச் சிந்திக்கிறார்கள். இதை ஏன் ஒரு சமூகப் பிரச்சனையாகக் கருதுகிறார்கள் இல்லை” என்று வருந்தியிருக்கிறேன்.

ஆனால் இன்று நானே உங்கள் எழுத்தில் தடுமாறியிருக்கிறேன். நீங்கள் தன்னிலையில் நின்று எழுதியதால்.. அதுவும் உண்மை தழுவி எழுதியதால் கதைசொல்லியை நீங்களாகவே மனதுக்குள் வரித்துக் கொண்டு வாசித்து முடித்து எனது கருத்தையும் எழுதி விட்டேன்.

படர்க்கையில் ஒரு கதையை எழுதுவதையும் விட, தன்னிலையில் எழுதும் போது அந்தக் கதையின் வலு அதிகமாயிருப்பதையும் பல சமயங்களில் நான் கண்டிருக்கிறேன். உங்களது இந்தக் கதையும் தன்னிலையில் நின்று, நான் என்று எழுதப் பட்டதால் வாசிப்பவர்களிடம் சற்று அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்கள் மீது குற்றம் சொல்வதிலேயே குறியாயிருக்கும் பெரியவர்களில் பலர், புலம் பெயர்ந்ததால் கெட்டு விட்டார்கள் என்கின்ற வார்த்தைக் கோர்வையையும் மறக்காமல் அவ்வப்போது சொல்லிக் கொள்வார்கள். இன்றைய இளைஞர்களையும் விட அன்று புலம் பெயர்ந்த இளைஞர்களின் வாழ்வு மிகமிகக் கடினமானதாக இருந்தது என்பது பலருக்கும் தெரியாது. வா என்று வரவேற்க யாருமின்றிய நிலையில் புலத்தில் வாழ்வைத் தொடங்கியவர்கள் அவர்கள். அவர்களின் பிரச்சனைகள், ஏமாற்றங்கள், மனஉளைச்சல்கள்.. இவையெல்லாமே எமது சமூகத்தினரால் உணரப் பட வேண்டியவை. தொடரும் இளைய சமூகத்திடம் இப்படியான பாதிப்புக்கள் ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியதும் எமது சமூகத்தின் கடமையே.

இது குறித்த ஒரு நோக்காகவே உங்கள் பதிவை நான் பார்க்கிறேன். வெட்டினார்கள், கொத்தினார்கள் என்று பார்ப்பதை விடுத்து, அவர்கள் ஏன் அப்படி ஆனார்கள், என்ற சிந்தனையோடு, அண்டி உள்ளவர்கள் அவர்களை அணுகுவார்கள் என்று நம்புகிறேன். உங்கள் பதிவான அதற்கான சிந்தனையை மற்றவர்களுக்குக் கொடுக்கலாம்.

Thursday, July 20, 2006

கதைசொல்லியும் Gang fightsம்

By டிசே தமிழன்
Tuesday, June 13th, 2006 at 8:14 am

கதைசொல்லியும் Gang fightsம்


Chandravathanaa says:
July 20th, 2006 at 1:10 am


இதை மீண்டும் ஒரு முறையாய் இன்று வாசித்து முடித்தேன்.

இதை முதன்முதலில் கனடாவுக்கு வந்து 6கிழமைகள் நின்று திரும்பிய சில வருடங்களில் வாசித்த போது ஒவ்வொரு சம்பவத்தையும் மனக்கண்ணில் கொண்டு வந்து பார்க்க முடிந்தது. கனடாவில் எமது இளைய சமுதாயத்தின் நடைமுறைகளை நேரிலே கண்ட போது எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. திடீரெனக் கிடைத்த சுதந்திரத்தை அவர்கள் பயன் படுத்திய விதமும், திடீரென ஆக்கிரமித்த குடும்ப உறவுகள் இல்லாத தனிமையின் வெறுமையைப் போக்க அவர்கள் கூடிய விதங்களும் மிகவும் வருத்தத்துக்கு உரியவை.

இதை எழுதிய நீங்கள்தான் கதையின் கதாநாயகனாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சி. இதை எழுதும் போது உங்கள் எழுத்தில் உங்களைப் புரிந்து கொண்ட தன்மை இருக்கிறது. இயலாமை உங்களை அறியாமலே உங்களை அழுத்தினாலும் அதனால் சில பல ஒவ்வாத செயற்பாடுகள் நடந்தாலும் உங்களிடம் மனிதம் இருந்திருக்கிறது.

அங்கு சுட்டவர்களும் வெட்டியவர்களும் மனிதமற்றவர்கள் என்றில்லை. ஏதோ ஓருவித விரக்தியும் தனிமையும் சேர்ந்து மனநிலை குழம்பியவர்கள் என்றே அவர்களைக் கொள்ள வேண்டும். அவர்கள் மீண்டும் ஒரு அன்பான உறவைச் சந்தித்து அன்பின் அணைப்பைப் பெறும் போது மாறியிருப்பார்கள். சாதாரண மனிதர்களாகியிருப்பார்கள். தமது தவறுக்கு நியாயம் தேடுபவர்களாய் இருந்தாலும் கூட உள்ளுக்குள்ளே கண்டிப்பாக வருந்தியிருப்பார்கள்.

இன்றைய நீங்கள் கூட அந்த வடுக்களுக்குள் அகப்பட்ட ஒருவனின் சாயலே தெரியாமலே இதுவரை எழுத்தால் எனக்கு அறிமுகமாகி இருந்தீர்கள். இத்தனை எழுத்து வன்மை உள்ள எத்தனை இளைஞர்களை புலம் பெயர்தல் புரட்டிப் போட்டிருக்கிறது என்ற உண்மையை உணர முடியும் போது வருந்தாமல் இருக்க முடியவில்லை.

Chandravathanaa says: July 20th, 2006 at 1:10 am

Sunday, March 26, 2006

12

12

11

11

10

10

9

9

8

8

7

7

ச்சு...ச்சு...பின்னிட்டாருய்யா!

ச்சு...ச்சு...பின்னிட்டாருய்யா!
Tuesday, January 17, 2006
கைப்புள்ள

Chandravathanaa Hat gesagt…
வணக்கம் மோகன்ராஜ்
இணைப்பைத் தந்ததற்கு நன்றி.
மகாநதி படத்தில் இன்னும் பல காட்சிகள் மனதைத் தொடுவதாய் உள்ளன.
மகளை விபச்சார விடுதியில் காணும் தந்தை... அந்தக் காட்சியும் என்னைப் பாதித்தது.
சிறைச்சாலைக்குள் கமலும் வெளியில் உறவுகளுமாய்.. அவைகளும்தான்.

நட்புடன்
சந்திரவதனா


At March 13, 2006 4:31 PM, கைப்புள்ள said...
//வணக்கம் மோகன்ராஜ்
இணைப்பைத் தந்ததற்கு நன்றி.
மகாநதி படத்தில் இன்னும் பல காட்சிகள் மனதைத் தொடுவதாய் உள்ளன.
மகளை விபச்சார விடுதியில் காணும் தந்தை... அந்தக் காட்சியும் என்னைப் பாதித்தது.
சிறைச்சாலைக்குள் கமலும் வெளியில் உறவுகளுமாய்.. அவைகளும்தான்.//


வாங்க மேடம்! தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. மகாநதி எனக்கு மிகவும் பிடித்த ஒரு படம்...அது சரியாக ஓடவில்லை என்பதில் வருத்தம் எனக்கு இன்றும் உண்டு. இந்த படம் வரும் போது நான் பள்ளி மாணவன்...அப்போ அவ்வளவா புரியலை...ஆனா இப்ப வளந்ததுக்கப்புறம் புரியுது அது எவ்வளவு நல்ல படம்னு.

March 13, 2006 3:50 PM

5

5

4

4

3

3

2

2

பெண்கள்

கோ.கணேஷ் @ Tuesday, March 08, 2005
http://gganesh.blogspot.com/2005/03/blog-post_08.html

At 2:50 PM, Chandravathanaa said...
யாருக்கு முதலிடம்...?
தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை.
தாய்க்கு இணையாக யாருமில்லை.
தாயின் அன்பை யாராலும் தர முடியாது.
கருவில் சுமந்த தாயின் ஸ்தானம் எவருக்கும் கிடைக்காது.
தாயின் அன்பில் துளியும் சுயநலம் இல்லை.
ஆனாலும் ஒரு மனிதன் கூடுதலாகக் கடமைப் படுவது மனைவியிடம்தான்.
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்தவள், மனைவி என்ற ஸ்தானத்துக்கு வந்ததும் கணவனுக்குச் செய்யும் பணிவிடைகள், காட்டும் அன்பு.... தேற்றும் பரிவு.. இத்தனைக்கும் மேலால் கணவனின் சினப்பு.. கோபம்.. தகிப்பு.. எல்லாவற்றையும் தாங்கி அவனையும் தாங்கி(கணவன் மனைவியைத் தாங்கவில்லையா என்று கேட்காதீர்கள. ஒரு மனைவி போல தாங்குமளவுக்கு இன்னும் கணவன்கள் இல்லை)அவனது குழந்தைகளுக்கும் தாயாக....... இந்தக் கடன்களை தீர்ப்பது என்பது ஆண்களால் முடியாதது.

Friday, March 10, 2006

ஆணாய் இருப்பதில் வெட்கப்படுகின்றேன்

By டிசே தமிழன்

Chandravathanaa says: Your comment is awaiting moderation.

March 10th, 2006 at 3:48 am
http://manaosai.blogspot.com/2006/03/blog-post_08.html

http://elanko.net/pathivu/?p=123

ஆசிரியர்களின் ஆசிரியர் - பச்சைக்கிளி

At March 07, 2006 8:41 AM, Chandravathanaa said...
ஏன் பிறகு எழுதவில்லை.
சிலரது முகத்திரைகளாவது கிளியட்டுமே.
பலருக்கு நன்மை கிடைக்காவிட்டாலும்
சிலருக்காவது தீமைகள் கிடைக்காமல் இருக்கும்.

http://kiliye.blogspot.com/2005/06/blog-post_14.html

ஆணாய் இருப்பதில் வெட்கப்படுகின்றேன் -By டிசே தமிழன்

March 6th, 2006 at 4:40 pm
நல்ல பதிவு டிசே.
ஆதங்கப் படுமளவுக்கு தீர்வுகளைத் தேட முடியாது இருப்பதுதான் எமது நிலை.

http://elanko.net/pathivu/?p=123

விபச்சாரம்.... sadayam

SADHAYAM Hat gesagt… வருகைக்கு நன்றி சந்திரவதனா...முதல் முறையா நம்ம ஏரியாவுக்குள்ள வந்திருக்கீங்க...மீண்டும் நன்றி.

அப்புறம் இரண்டாவது பத்தியில்...தன்னைக் மிகக் கேவலமாய் காயப்படுத்திய மூர்க்கமான ஒரு எதிரியை வீழ்த்த, அவன் எதிரியோடு சேர்கிறோம்....புதுக்கூட்டாளியோடு சேர்ந்து ஒரு சுற்றில் எதிரியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு வந்த வேளையில், என் எதிர்பார்ப்புக்கு தகுந்த வகையில் என் புதுக்கூட்டாளி நடந்து கொள்ளவில்லை என கூறி சொற்ப சலுகைகளுக்காக எதிரியிடம் சோரம் போவது துரோகமா, விபச்சாரமா?

9:14 PM

http://sadhayam.blogspot.com/2006/03/blog-post.html

Chandravathanaa Hat gesagt…
இதைப் பார்த்தால் அதரசியல் மாதிரி இருக்கே!

9:25 PM

http://sadhayam.blogspot.com/2006/03/blog-post.html

Chandravathanaa Hat gesagt…
உண்ண ஏதுமின்றி உயிருக்கு போராடும் குழந்தையை காப்பாற்ற சோரம் போகிறாள் தாய்...இது தியாகமா, விபச்சாரமா?

இதற்கு விபச்சாரம் என்ற பெயர் வைக்கப் பட்டிருந்தாலும் இது தியாகமே!
மனம் விரும்பாமல் ஒருவனோடு உறவாடுவது என்பது மிகவும் உளவலியைத் கொடுக்கக் கூடியது.
அதையே செய்ய வேண்டிய நிலை ஒரு பெண்ணுக்கு வந்தால் அது இயலாமையின் வெளிப்பாடே.
தன்வலியைப் பொருட் படுத்தாது குழந்தைக்காக தன்னை இழப்பது தியாகத்தின் வெளிப்பாடே.

9:32 PM

http://sadhayam.blogspot.com/2006/03/blog-post.html

Saturday, March 04, 2006

விபச்சாரம்.... SADHAYAM

Chandravathanaa Hat gesagt…
irandavathu pnathiyil vilakkam kuraivai ullathu.
neenkal solvathu puriyavillai

9:00 PM
Saturday, March 04, 2006

http://sadhayam.blogspot.com/2006/03/blog-post.html

nila-பூப்பறிக்க வருகிறோம் சுற்று 6-2

தருமி
உங்களுக்கு நான் போட்ட வாக்கு ஒரு சதப் பிரயோசனமில்லாமல் போய் விட்டது. என்ன செய்ய? நான் உங்கள் மெயிலைப் பார்த்த கையோடு போட்டேன். அதற்கு முன்னரே நிலா வாக்குச் சாவடியை மூடி விட்டார் என்பது தெரியாமல்.

குமரன்
நீங்கள் இரண்டு நிமிசம் லேற். தருமி முந்தி விட்டார்.
அவருக்கு வாக்குப் போட்டு விட்டு ஜீமெயிலைப் பார்த்த போதுதான் உங்கள் வேண்டுதல்.

என்றாலும் பரவாயில்லை. இரண்டு பேருமே ஏதாவது எலக்சனில் நின்று பாருங்கள். வீடு வீடாய் போய் வேட்டி சட்டை கொடுக்கத் தேவையில்லை. இப்படி மின்னஞ்சல் வழியாவே வென்று விடுவீர்கள்.

http://nilaraj.blogspot.com/2006/02/6_28.html

nila-பூப்பறிக்க வருகிறோம் சுற்று 6

எனது ஓட்டு எனது அணிக்கே(செல்வன் தருமி)

http://nilaraj.blogspot.com/2006/02/6_28.html

28.2.2006

Dyno-தமிழ் - Thamizh

dyno
நீங்கள் கேட்ட பாடல் இங்கே... பெற்றதாய்தனை
http://cinemapadalkal.blogspot.c...og- post_23.html

chandravathanaa | Homepage | 02.23.06 - 9:22 am | #

http://damntest.blogspot.com/2004/06/aliquam-vestibulum-odio-vitae-urna.html

சிவா -உயிரே! உயிரே! உருகாதே!

கீதம்...சங்கீதம்

At 9:50 PM, Chandravathanaa said...
சிவா
நல்ல நல்ல பாடல்களைத் தருகிறீர்கள்.
நன்றி.

Wednesday, February 22, 2006

பாவை-தடை செய்யப்பட்ட கவிதையிலிருந்து

பாவை
உங்கள் பதிவுகள் எல்லாவற்றையும் படித்தேன்.
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
ஏன் தொடராமல் விட்டு விட்டீர்கள்?
இலங்கையிலிருந்து ஒரு பதிவு என்னும் போது வாசிக்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது.
தொடர்ந்தும் எழுதுங்கள்.

நட்புடன்
சந்திரவதனா

http://paavaioruthi.blogspot.com/2005/11/blog-post_113163945597117375.html

http://paavaioruthi.blogspot.com/2005/11/blog-post_113163945597117375.html

2006க்கு முன்னான எனது சில பின்னூட்டங்கள்

கொழும்பு: மலரும் சில நினைவுகள்

DISPASSIONATED DJ

Tuesday, October 11, 2005

Chandravathanaa said...
இவ்வளவு நீட்டாக எழுதோணுமா?இப்போதைக்கு அரைவாசிதான் வாசித்தேன். அப்படியே பழைய.. இல்லையில்லை, இளமைக்கால இனிய நினைவுகளை கிளறி விட்டுள்ளது உங்கள் நினைவு. மீண்டும் வந்து மிகுதியையும் வாசித்து விட்டு....
October 14, 2005 4:48 AM



பெண்மை வாழ்கவென்று

Friday, March 18, 2005

Chandravathanaa said...
வாழ்த்துக்கள் சாரா.தொடர்ந்து எழுதுங்கள்.
9:47 AM

Sarah said...
இல்லை சந்திரவதனா, தற்பொழுது எழுதுவதாக எண்ணம் இல்லை. பின்னூட்டம் இடுவதற்காக மட்டுமே ஆரம்பித்தது. நன்றி, நீங்கள் இங்கு வந்தமைக்கு.